Report : Admin | on August 06, 2011 | at 6:14 am


உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் இளங்கோவன் நேற்று இரவு காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவர் இளங்கோவன் (68). இவர், அண்ணா நடத்தி வந்த ‘திராவிட நாடு’ பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றியவர்.

சென்னை பட்டினப்பாக்கம் அரசினர் குடியிருப்பில் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில், காயமடைந்த இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு திடீரென இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இளங்கோவனுக்கு விஜயா என்ற மனைவியும், கண்மணி என்ற மகளும், கார்த்திக் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். அண்ணா முதல்வராக இருந்தபோது அவருக்கு கார் டிரைவராகவும், தனி செயலாளராகவும் இருந்தவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

எழுத்துரு மறுஅளவீடு

Resize Font
 
தாரிக் செய்திகள் Copyright © 2011 Taariq News